Thursday, September 7, 2023

மாலை மழை!

 



மழலையின் ஓயா மொழி போல், 

அன்னையின் தீரா அன்பைப் போல், 

ஆசானின் அளவில்லாக் கருணைப் போல், 

நேர்மை நட்பின் இனிமை போல், 

மனதையும் மண்ணையும் நனைத்துப் பொழிந்தது, 

மாலை மழை!

பயன்!

மலர்தலே பயன், மலருக்கு, 

வாழ்வதே பயன், வாழ்க்கைக்கு!

எண்ண அலை

 


ஆயிரமாயிரம் அலைகளாய்,

எழுந்து மறையும் எண்ணங்கள்! 

அழகியச் சிப்பிகளைக் கொண்டுச் சேர்க்கும் சில எண்ணங்கள், 

நிலைத்தப் பாறையையும் அரித்துச் செல்லும் சில எண்ணங்கள்!

சரவணன்!

தீர்க்க வேண்டிய சண்டைகள், 
வளர வேண்டிய நட்பு, 
பகிர வேண்டிய நிகழ்வுகள், 
தேங்கிக் கிடக்கின்றன, 
மனதில் ஓர்ஓரமாய்! 

மூன்று வருடங்கள் பகிர்ந்த 
நட்பின் தரத்தை,
இருபது வருடங்கள் கழிந்தும், 
உன் இன்மையை உணர்தலில் உணர்கிறேன்!

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...