Saturday, April 20, 2019


நிலாச் சோறு!
  வாழ்வின் அருமையானச் சேமிப்பு - நினைவுச் சேமிப்பு. பழைய நினைவுகளை அசைப்போடுதலும், தோழமையடன் பகிர்ந்து கொள்வதும் ஓர் ஆனந்த அனுபவம். அவ்வாறு மனதில் தோய்ந்த ஒரு பசுமையான நினைவு, சித்திரைப் பௌர்ணமி அன்று உண்ணும் நிலாச் சோறு.

      மதுரை நகர் மக்களுக்கு சித்திரை மாதம் கொண்டாட்டம் நிறைந்த மாதம். மதுரை மீனாட்சி அம்மனுக்கு பூப்பல்லக்கு, திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேர் என்றுத் தொடர்ந்து திருவிழாக் கோலம் கொண்டு விளங்கும். சித்திரைப் பௌர்ணமி அன்று அழகர்ஆற்றில்   இறங்குவார். அந்நிகழ்ச்சியின் வரலாற்றையும் தன் காலத்தில் எவ்வளவுச் சிறப்பாய் நிகழும் என்பதையும் பாட்டி சொல்லிக் காட்டுவார்.

        அன்று இரவு மொட்டை மாடியில் சுசீலா அத்தை, அத்திம்பேர், ராஜி அக்கா, ரமேஷ் அண்ணா, விஜி அக்கா, ஹரி, ராதிகா, அம்மா, பாட்டி மற்றும் நான், என்று அனைவரும் நிலா வெளிச்சத்தில் உண்டுக்கதை பேசி, விளையாடிய நாட்கள் என் நினைவுச் சேமிப்பில் பத்திரமாய் உள்ளது.

பழையப் பழக்கவழக்கம் தொட்டுப் புதிய நினைவுகளையும் சேமிக்க வேண்டும் அல்லவா? இப்பேரார்வத்தல் என் மனம் ஒத்தத் தோழி அனு. இந்தச் சித்திரைப் பௌர்ணமிக்கு நிலாச்சோறு உண்ணத் திட்டமிட்டோம். நிலவு மேகத்தில் ஒளிந்தே ஒளிபரப்ப, சவுத் வின்டசரில், வீட்டின்த்தோட்டத்தின் குளக்கரையில் உண்டோம் நிலாச்சோறு!

 சாய்ஜோஷ், நிமல், அனு, கார்த்திக், மணி, சுபாவின் நினைவுப் பெட்டகத்தில் இன்று புதியச்சேமிப்பு! 

Snow Desert

It is a dream so beautiful,
The experience still felt well,
What can I call this feeling?
An intense happiness, or may be bliss.

The darkness unbundled to twilight slowly,
Like one's purpose revealed to self,
I found myself in a vast landscape,
It sure had no horizon!

With fluffy flakes still falling down,
All I could see is white unblemished.
White, the symbol of peace,
Spread the peace in me as I kept watching it.

The sound of the winds,
Resonated with my heart's voice,
I identified my soul,
Being part of the infinite white,
The infinite Love!

Friday, April 19, 2019

Niagara Falls

You aren't my enemy,
You aren't any evil,
Yet,
Why does your fall make me happy?
குரங்கு மனம்!

இடையுறாது ஓடிய ஆற்று வெள்ளம்,
பாதையில் உள்ள குட்டையில் சிறிதுத் தேங்கியது போல்,
இல்லம், அலுவல் என்று ஓடியிருந்த 
வாழ்க்கையில், சிறிது தனிமை!

தனிமையைக் கண்டதும்,
இறந்தும் இறவாத காலம்,
நிகழ்வுகள் புரியாத காலம்,
எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த காலம், என்று,
மாறிமாறித் தாவியிருந்தது
குரங்கு மனம்!

குரங்கு மனதை கொட்டி அமர்த்த இயலாது,
அதன் வழியில் விட்டேன்!
வாழ்வில் கிடைத்த அன்பையும், சிறு வெற்றிகளையும்,
நினைத்துப் பூரித்து உறங்கியது சில நாட்கள்!
தான் அடைந்த காயங்களையும், பெருந்தோல்விகளையும் விட,
தான் செய்த காயங்களால், கணத்து,
உறங்காமல்  தவித்தது சில நாட்கள்!
வாழ்க்கையின் பயன் என்ன? செல்லும் வழி என்ன?
என்று குழம்பியிருந்தது சில நாட்கள்!

குட்டை நீர் ஆறாக  மீண்டும் ஓடும் நாள் நெருங்க,
அன்புடன் கடமையைச் செய்து,
நட்பு வளர்த்து, நல்லன செய்வோம்!
மற்றவை இறைவன் வழி என்று,
தெளிவுடன் ஓர் இடம் அமர்ந்தது,

குரங்கு மனம்!

வழிக்காட்டி நாய்

Guide Dog


இருள் நிறைந்த என் பாதையில்,
நீயே என் வழிக்காட்டி,
உன்னை நம்பியே,

என் பயணங்கள்!

தேடல்


சுவாசம்  போல்,  
இரத்த ஓட்டம் போல்,
இதயத் துடிப்புப் போல்,
உயிர்த்திருப்பதின்
அடையாளம் தேடல்!

தன் அடையாளம்  பதிக்கத் தேடும் அகம்,
அகம் மீறிய உண்மை நிலையைத் தேடும் ஆன்மா!
இத்தேடல் தீர்ந்த மௌன நிலையே,

பிறப்பு அறுந்த மரண நிலை!! 

Thalattu!

களிப்போடு விளையாடும் 
கண்சிரிக்கும் என் கண்ணா!
கண்ணுறங்க நேரமாச்சு,
களைப்பாறு வா கண்ணா!
நிலவு வந்து நேரமாச்சு,
நீண்ட நேரம் ஆடியாச்சு,
நாளை மீண்டும்
நேரத்தில் எழுந்திடுவாய் என் கண்ணா!
கண்பொத்தி விளையாட்டு,
கவின்குரலில் பலபேச்சு,
கலகலக்கும் உன் சிரிப்பில்
கரைந்து விடும் என் நேரம்!
ஊரும் உறங்கியாச்சு,
உடலும் அயர்ந்தாச்சு,
உள்ளத்தில் அமைதி கொண்டு
உறங்கிடுவாய் என் கண்ணா!

Goosebump Moments!

The moment you give a hearty smile,
When I kiss you goodnight!
The moment you scream with joy,
When I come back from work!

The moment you crawl to me & Hug me tight,
Amidst your play!
The moment you hold my fingers,
While you are asleep!

The moments,
My dear son,
Fill my heart with love &
Flow over as tears of joy!

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...